×

திருக்கழுக்குன்றம் அருகே பயங்கரம் வீட்டு மனை தகராறில் பெண் அடித்து கொலை: தாய், மகனுக்கு வலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த கொல்லமேடு கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி வேண்டாமிர்தம் (55). காசி குடும்பத்துக்கும், அவரது தம்பி ரங்கநாதன் குடும்பத்துக்கும் பல ஆண்டுகளாக வீட்டு மனை பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை வேண்டாமிர்தம், தனது மாட்டை ரங்கநாதன் வீட்டின் ஓரமாக ஓட்டி கொண்டு சென்றார். அப்போது, ரங்கநாதன் மனைவி சந்திரா (48), அவரது மகன் சரவணன் (22) ஆகியோர் ‘எங்க வீட்டு வழியாக ஏன் மாட்டை ஓட்டி செல்கிறாய்’ என தகராறில் ஈடுபட்டனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சந்திரா, சரவணன் ஆகியோர், உருட்டுக்கட்டையால் வேண்டாமிர்தத்தை சரமாரியாக தாக்கினர் இதில், தலையில் படுகாயமடைந்த வர், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தாய், மகனை தேடி வருகின்றனர்.


Tags : housing dispute ,death ,Thirukkalukkunram , Screwdriver, housing dispute, woman beaten to death, mother, son web
× RELATED திருக்கழுக்குன்றம் 10வது வார்டில் ரூ.38...