×

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பைக்குகள் தீவைத்து எரிப்பு

வேளச்சேரி: பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 155வது பிளாக் பகுதியை சேர்ந்த அருண் (27), எட்வர்ட் ரீகன் (37), அனிதா (30), கோபி (23) ஆகியோர் தங்களது பைக்குகளை நேற்று முன்தினம் இரவு குடியிருப்புக்கு வெளியே நிறுத்தி இருந்தனர். நள்ளிரவில் இந்த 4 பைக்குகளும் தீப்பற்றி எரிந்தன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 4 பைக்குகளும் எரிந்து நாசமாகின. இதுகுறித்த புகாரின் பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக்குகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதே அடுக்குமாடி குடியிருப்பு 113வது பிளாக் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 7 பைக்குகள் தீவைத்து எரிக்கப்பட்டன. சில மாதத்துக்கு முன் 5 பைக்குள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுபோல், தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags : Cottage replacement board, apartment, bikes on fire, flames
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...