×

வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்ட செய்தி பொய்...அப்பாவின் உடல்நிலை நேற்று இருந்தது போலத்தான் இருக்கிறது: எஸ்.பி.பி.சரண்

சென்னை: வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்ட செய்தி பொய் என்று எஸ்.பி.பி. உடல்நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு ஆகஸ்ட் 5ம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14ம் தேதி மோசமடைந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் சீரான நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த எஸ்.பி.பி.யின் உடல்நிலை நேற்று மீண்டும் கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து பல வதந்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் விதமாக அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அப்பாவின் உடல்நிலை நேற்று இருந்தது போலத்தான் இருக்கிறது. செயற்கை சுவாசத்துக்கான வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டதாக ஒரு செய்தி உலவுகிறது. அது பொய். அவர் விரைவில் அதன் உதவி இல்லாமல் சுவாசிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து பிரார்த்தியுங்கள். உங்கள் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு குடும்பமாக நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், என கூறியுள்ளார். 


Tags : Dad ,SBP Charan , SPB, ventilator, Corona, SPB.Charan
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...