×

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு 720 டாஸ்மாக் கடைகள் திறப்பு : முகக்கவசம் அணியாத குடிமகன்களுக்கு டோக்கன் மறுப்பு!!

சென்னை: சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் வழங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். 14 வகையான நெறிமுறைகளை கடைபிடிக்க ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், சமூக பரவல் ஆகவில்லை என்றும் அரசு தெரிவித்தது.இதையடுத்து, மீண்டும் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஆலோசனையை தமிழக அரசு மேற்கொண்டது. இந்த ஆலோசனையில் கடும் விதிமுறைகளுடன் கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, 18ம் தேதி முதல் சென்னையில் கடைகள் திறக்கப்படும் எனவும் நேற்று முன்தினம் அரசு அறிவித்தது.

எனவே, 5 மாதத்திற்கு பிறகு இன்று சென்னையில் 720 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. கடை ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதன்படி,

* கடையின் கிரில் பகுதிக்கு வெளிப்படையான நெகிழிகள் விற்பனை கவுன்ட்டர் தவிர்த்து பொருத்தப்பட வேண்டும்.
* தடுப்பு அமைத்து அதன் அளவு விவரம் குறிப்பிட வேண்டும்.
* வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும்.
* சாமியான பந்தல் மற்றும் மைக் செட் இருக்க வேண்டும்.

* வாடிக்கையாளர்கள் நிற்கும் வகையில் 3 அடி இடைவெளி விட்டு 50 வட்டங்கள் வண்ணத்தினால் அல்லது பிளீச்சிங் பவுடரால் இருக்க வேண்டும்.
* தன்னார்வலர்கள் அல்லது மதுக்கூட ஊழியர்கள் 5 பேரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தி கொள்ளலாம்.
* கடையில் போதிய இடம் இருப்பின் 2 கவுன்ட்டர்களை அமைத்துக்கொள்ளலாம்.
* கடையின் சுற்றுபுறம் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
* இரு நபர்களுக்கு இடையில் சமூக இடைவெளி 3 அடி இருக்க வேண்டும்.
* வாடிக்கையாளர்கள் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கவுன்டரில் அனுமதிக்க வேண்டும்.
* பணியாளர்கள் காட்டன் கையுறை, மாஸ்க் மற்றும் பேஸ் சீல்டு அணிந்து பணிபுரிய வேண்டும்.

* மாவட்ட மேலாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே கடை திறக்கப்பட வேண்டும்.
* மேற்காணும் பணிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும். தவறும்பட்சத்தில் கடைகள் திறக்கப்படமாட்டது.
இவ்வாறு டாஸ்மாக் நிர்வாகம் அதன் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

* ஒரு மணி நேரத்திற்கு 50 டோக்கன்கள்
மால்கள் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் செயல்படும். ஒரு மணி நேரத்திற்கு 50 டோக்கன்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.


Tags : citizens ,stores ,Tasmac ,Chennai ,Corona , Corona, vulnerability, Chennai, Tasmac, stores, opening, facade
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு