கும்மிடிப்பூண்டி: கீழ்முதலம்பேடு, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கவரைப்பேட்டை போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொருக்குப்பேட்டையில் இருந்து மாதர்பாக்கம் நோக்கி வந்த பைக்கை சோதனையிட்டனர். அதில், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா இருந்தது தெரியவந்தது. அதில், வந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், தாணிப்பூண்டி பகுதியை சேர்ந்த குமரேசன் (34). என்பதும், கொருக்குப்பேட்டையிலிருந்து மாதர்பாக்கத்தில் உள்ள கடைகளுக்கு குட்கா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.