×

பெட்ரோல் பங்க்கில் அதிநவீன சிசிடிவி: போலீசார் அறிவுறுத்தல்

பொன்னேரி: பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொன்னேரி, மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் கலந்துகொண்டார். பின்னர் அவர் பேசியதாவது, குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் வந்து தப்பிச் செல்கின்றனர். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன பதிவெண்களையும், முகத்தையும் துல்லியமாக பதிவு செய்யும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும், பெட்ரோல் பங்க் விற்பனை நிலையங்களில் நடைபெறும் கொள்ளை வழிப்பறி சம்பவங்களை கண்டறிவது மட்டுமல்லாமல் கிராமங்களில் நடைபெறும் குற்றச்செயல்களை கண்காணித்து விசாரணை மேற்கொள்வதற்கு வசதியாக அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தி காவல்துறைக்கு பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Petrol punk, sophisticated CCTV, police
× RELATED தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100...