சென்னை: கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த SPB அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.