×

விபத்தில் இறந்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி: நேரில் பார்த்த பாட்டி மரணம்

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே ஏர்வாய்ப்பட்டினத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (30). இவரது மனைவி ராசாத்தி. சத்யராஜ் நேற்றுமுன்தினம் மதியம் விடுமுறை தினத்தை கழிக்க தனது நண்பர் இளையபெருமாளுடன் கல்வராயன்மலைக்கு சென்றுள்ளார். பின்னர் வெள்ளிமலையில் இருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, கொடுந்துறை வளைவில் திரும்பும்போது எதிரே வந்த வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சத்யராஜ் இறந்தார்.

இளையபெருமாள் பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தோப்பூர் உடையார் தெருவில் கோவிந்தசாமி மகன் சக்தி (29) என்பவர் வசித்து வருகிறார். எலக்ட்ரீசியனான இவர் நேற்றுமுன்தினம் தனது நண்பர் சின்னையனுடன் வெளியே வேலைக்காக சென்றுள்ளார். இறப்பு செய்தி குறித்து கேள்விப்பட்ட சக்தியின் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என வந்தது.

இதுகுறித்து சரியாக விசாரிக்காமல் சக்தியின் பெற்றோர் வாகன விபத்தில் இறந்தது தங்களது மகன்தான் என தவறுதலாக நினைத்துக் கொண்டு வீட்டின் முன் பந்தல் அமைத்தனர். வீட்டில் உறவினர்கள் திரண்டு, உடலை வாங்குவதற்காக காத்திருந்தனர். இதற்கிடையே சின்னையன் அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு சக்தி தன்னுடன்தான் இருக்கிறார் என தகவல் கூறினார். இதனைதொடர்ந்து சக்தி நேற்று வீட்டுக்கு வந்தபோது, அவரை நேரில் கண்ட பாட்டி மீனாட்சி (80) அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags : survivor ,accident ,death , Died in the accident, alive, villagers, shocked, witnessed, grandmother died
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...