×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராசிபுரம் அருகேயுள்ள ப.மு. பாளையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது, விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மனிதர்களே மனித கழிவுகளை சுத்தம் செய்யும் அவல நிலையில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வரும் சம்பவங்கள், சோகத்தை ஆழ்த்தி வருகிறது.


Tags : poison gas attack ,Rasipuram ,Namakkal district , Namakkal, Rasipuram, poison gas, death
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்