×

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி. பூரண நலம்பெற்று பழையபடி வலம் வர வேண்டும்!: தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து..!!

சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண நலம்பெற்று பழையபடி வலம் வர வேண்டும் என்று அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். தனது அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட எஸ்.பி.பி. மீண்டு வர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனை போலவே, கொடிய கொரோனாவில் இருந்து மீண்டு வந்து எஸ்.பி.பி. மீண்டும் பாடுவார் என்று இயக்குனரும், நடிகருமான மனோபாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மனமும், சிந்தனையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி.-யை நினைத்துக் கொண்டிருப்பதாக நடிகர் மோகன் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. பூரண குணமடைந்து பழையபடி வலம் வர வேண்டும் என்று தானும் ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்வதாக மோகன் கூறியுள்ளார். கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும், அவ்வப்போது கண்விழுத்து பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் விரைவில் குணமடைய வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைபிரபலங்கள் பலர் எஸ்.பி.பி உடல்நலம் முழுமை பெற பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

Tags : playback singer ,cinema celebrities ,leaders , Playback singer, S.P.B. , Leaders, Cinema Celebrities, Greetings
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...