சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை செய்த 45 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 36 மாஞ்சா நூல் கண்டுகள், 164 பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மூலக்கடை மேம்பாலத்தில் சென்ற மாதவன் என்பவரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.