×

ரிப்ளக்டர் ஸ்டிக்கர் உத்தரவை நீக்க கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது.  இந்நிலையில் பிரதிபலிப்பு ஸ்டிக்கரை ஒட்டி வந்தால் மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எப்சி செய்ய இயலும் என தெரிவிக்கிறார்கள். மோட்டார் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம் இல்லை.

பெருத்த கடன் சுமையில் மிகப்பெரிய மன அழுத்தத்தில் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய, உணவுக்கே வழியில்லாத நிலையில் இருந்து வருகிறார்கள். எனவே பிறப்பித்துள்ள பிரதிபலிப்பு ஸ்டிக்கர் தொடர்பான அரசாணையை ரத்து செய்து பல லட்சக்கணக்கான மோட்டார் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க உதவிட வேண்டும்.

Tags : reflector sticker
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...