×

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் 24 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

விருதுநகர்: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி விடுமுறையால் குழந்தைகள் வீடுகளில் உள்ளனர். மக்களின் வறுமையைப் பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தி இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும்  போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தியாகராஜபுரத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ரீத்தா பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பலர் பட்டாசு ஆலையை விட்டு தப்பிய நிலையில், எஞ்சியிருந்த 9 சிறுவர், 15 வளரிளம் பெண்கள் என 24 பேர் மீட்கப்பட்டனர். இதன் பின் பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சோதனைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.



Tags : child laborers ,firecracker factory ,Virudhunagar. , Virudhunagar, Fireworks Factory, 24 Child Labor Rescue
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...