×

ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 838 பேர் மீட்பு

சென்னை: கோலாலம்பூரில் இருந்து 174 பேருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. தனிமைப்படுத்த 126 பேர், அரசின் இலவச தங்குமிடங்களுக்கும், 48 பேர்  ஓட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. பெரும்பாலோனோர் திருச்சியில் இறங்கி விட்டனர். சென்னைக்கு 6 பேர் மட்டுமே வந்தனர். இவர்கள் தனிமைப்படுத்த அரசின் இலவச தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டனர். ரியாத்தில் சிக்கி தவித்த 289 பேர், ஓமன் நாட்டில் தவித்த 125 பேர் சிறப்பு தனி விமானங்களில் நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தனர். இவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள்.

Tags : Curfew, Overseas, 838, Rescue
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...