×

அவணிப்பூர் கிராமத்தில் தரைப்பாலம் சீரமைக்க கோரிக்கை

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஆவணிப்பூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் மெயின் ரோட்டில் இருந்து அம்பேத்கர் தெரு செல்லும் சாலையில் பல வருடங்களுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தரைப்பாலத்தின் நடுப்பகுதி சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் சேதமடைந்த தரைப்பாலத்தில் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,ground bridge , Avanipur, Ground Bridge
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு