×

மின்விசிறி சுவிட்ச் போடும்போது மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் பலி: சூளைமேட்டில் பரிதாபம்

சென்னை: வீட்டில் உள்ள மின்விசிறி சுவிட்ச்சை போடும் போது மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுவன் துடிதுடித்து உயிரிழந்தான். இந்த சம்பவம் சூளைமேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் 3வது நகரை சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி (34). இவர் பைக் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முல்லை. இவர்களது 4 வயது மகன் தருனேஷ்வரன். நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. அப்போது, தருனேஷ்வரன் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றான். பின்னர் அறையில் இருந்த மின் விசிறி சுவிட்சை போட்டுள்ளான்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து மயங்கி விழுந்தான். இதை பார்த்த அவனது தந்தை தட்சிணாமூர்த்தி மகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு சிறுவனின் பெற்றோர் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத சம்பவம் பார்ப்போர் மனதை கரைய வைத்தது. இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சூளைமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Fan, switch, electric shock, 4 year old boy, killed, kiln
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...