×

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த காரனோடையில் வசித்து வரும் வழக்கறிஞர் ஒருவர் பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சோழவரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்று கொடுத்த புகாரின் பேரில் சோழவரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பொன்னேரி சார்பு நீதிமன்ற வாயில் முன்பு நேற்று வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் தொழிற்சாலை கொடுத்த புகாரின் மீது விசாரணை ஏதும் நடத்தாமல் சோழவரம் காவல் ஆய்வாளர் வழக்கறிஞர் மீது பொய்வழக்கு போட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். உடனடியாக வழக்கறிஞர்  மீது போடப்பட்ட பொய் வழக்கை போலீசார் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : Lawyers , Lawyers, Demonstration
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்