×

தற்கொலை செய்ய முயன்றவருக்கு கொரோனா

பூந்தமல்லி: திருவேற்காட்டை அடுத்த துண்டலம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வினுபாபு(33), இவர் குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் வினுபாபுவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் படுக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டதால் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வினுபாபு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.


Tags : suicide ,Corona , Suicide, attempted, corona
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை