×

மும்பை, புனே உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்..!!

மும்பை: மும்பை, புனே உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை உள்பட கடலோர மாவட்டங்களில் வருகிற 15ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் மும்பை நகரை பொறுத்தவரை மிதமான மழையே எதிர்பார்க்கப்படுவதாகவும், தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசியதாவது: புனே, கோலாப்பூர், சத்தாரா மாவட்டங்களில் வரும் 15ம் தேதி வரை  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு மராட்டியம், மரத்வாடா, விதர்பா ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.

மேலும் கடலோர மாவட்டங்களை போல மலையோர பகுதிகளில் மேக கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்துக்கு அந்த பகுதிகள் மற்றும் மத்திய மராட்டிய பகுதியில் மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கோசாலிகர் தகவல் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Mumbai ,Indian Meteorological Department ,states ,Pune , Mumbai, Pune,rains ,Indian Meteorological Department,
× RELATED வெப்ப அலை: தமிழ்நாட்டில் இன்று மஞ்சள் எச்சரிக்கை