ஓசூர்: ஓசூர் கல்வித்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக கண்காணிப்பாளர் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கெலமங்கலத்தைச் சேர்ந்த கிஷோர்குமாரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது பாலாஜி போலீசிடம் சிக்கினார். கிஷோர்குமாரின் தந்தை இறந்த பின் உதவித்தொகை பெற கண்காணிப்பாளர் பாலாஜி லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.