சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 87 வயது கொரோனா நோயாளி உயிரிழந்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் நோயாளி உயிரிழந்தார். சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல் முறை ஆகும்.