×

பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதல்..: சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் ஜாகர்குன்டாவில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு மாவட்ட காவல் ரிசர்வ் படையினர், மத்திய காவல் ரிசர்வ் படையினர், கமாண்டோ படை, கோப்ரா படை ஆகிய பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, புலாம்பர் கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 4 நக்சல்களை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிக்கும் பொருட்களின் பெரிய தற்காலிக சேமிப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படையினருக்கு எந்தத் பாதிப்பும் ஏற்படவில்லை, எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Chhattisgarh ,militants , Security forces, clash, Chhattisgarh, Naxalite militants, shot dead
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...