சென்னை: அமெரிக்காவில் இருந்து மீட்பு சிறப்பு விமானத்தில் வந்த 58 பயணிகள், அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, தங்கள் லக்கேஜ்களை எடுக்க கன்வேயர் பெல்ட் அருகே வந்தனர். ஓரிரு பயணிகளின் லக்கேஜ் மட்டும் வந்தன. பெரும்பாலானவர்களின் லக்கேஜ் வரவில்லை. இதனால் விமான நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். பிறகு ஏர்இந்தியா அதிகாரிகள் வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். விசாரணையில், டெல்லியில் விமானம் மாறும்போது பயணிகளின் லக்கேஜ்கள் தவறுதலாக மாறிவிட்டது என தெரிந்தது. அந்த லக்கேஜ் எடுத்து வரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கே கொண்டு வந்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.