×

அரசு பள்ளியில் லேப்டாப்கள் திருட்டு

பொன்னேரி: பழவேற்காடு பகுதியில் ஜெகதாம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த முகுந்தன் (71). என்பவர் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து காவலாளி முகுந்தனை கட்டிப்போட்டு பள்ளி கதவை உடைத்து பள்ளியில் இருந்த 14 லேப்டாப் மற்றும் டிவியை திருடி சென்றனர். காவலாளி முகுந்தனின் சத்தம் கேட்டு பள்ளி அருகே உள்ள பொதுமக்கள் வந்து அவரை மீட்டு விசாரித்தபோது பள்ளியில் லேப்டாப்கள் மற்றும் டிவியை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து, திருப்பாலைவனம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இதேபோல், கொரோனா ஊரடங்கு நாட்களில் பெரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளைவாயல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பூட்டை உடைத்து லேப்டாப்கள் கடந்த இரண்டு மாதங்களில் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.


Tags : Theft ,government school , Government school, laptops, theft
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...