×

கோயில் உண்டியலை திருடியவர் கைது

ஆவடி: முத்தாபுதுப்பேட்டை போலீஸ் ஏட்டு சேரலாதன் தலைமையில் ஊர்க்காவல் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த பைக்கை சோதனையிட்டபோது, பின்னால் அமர்ந்திருந்தவரின் கையில் கோயில் உண்டியல் இருந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பியோடினார். போலீசார் மற்றொருவரை விரட்டி பிடித்தனர். அவரிடம் இருந்து பைக், உண்டியல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், திருமுல்லைவாயல் தென்றல் நகர் வண்ணாக்குட்டையை சேர்ந்த பாபு (32) என்பதும், தப்பி ஓடிய வாலிபர் அண்ணனூர் ஏரிக்கரையை சேர்ந்த விக்கி (27) என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த உண்டியலை முத்தாபுதுப்பேட்டை, டிபன்ஸ் காலனியில் உள்ள சிவன் கோயிலில் இருந்து திருடியதை பாபு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பாபுவை கைது செய்தனர். தப்பியோடிய விக்கியை தேடுகின்றனர்.

Tags : Temple bill, thief, arrested
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்