×

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து புன்செய் பாசனத்துக்கு நீர் திறக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்கு வரும் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதானக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



Tags : Palanichamy ,reservoir ,Kelavarapalli ,Water Opening , Kelavarapalli, Reservoir, Water Opening
× RELATED திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் டீக்கடை ஊழியர் பலி