×

தொடர் மழையால் மண் சரிவு: அந்தரத்தில் தொங்கும் வீடு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  நேற்று முன்தினம் முதல் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.

கூடலூர் நகர் செப்பேட்டை காமராஜ் காலனி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 5க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் ராஜ் என்பவரது வீடு மண் சரிவால் அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது. மண்சரிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை பாதுகாக்க இப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : house , Continuous rain, landslides, house
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை