×

போயஸ் கார்டன் வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக் தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடு நிர்ணயித்து நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின்படி, ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசான தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கை இரு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 12ம் தேதி (நாளை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இதே கோரிக்கைகளை முன்வைத்து, ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கும் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்து.

Tags : Jayalalithaa ,station ,Boise Garden Vedha ,protests , Boise Garden, Vedha Station, Jayalalithaa memorial, protest, case, in iCourt, hearing tomorrow
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...