×

இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேருக்கு தொற்று

புழல்: சோழவரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு 3 காவலர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால், காவல் நிலையம் அப்போது, இரண்டு முறை மூடப்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சோழவரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால் 3வது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டது. சோழவரம் ஒரக்காடு சந்திப்பில் உள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : inspector , Inspector, for 8 persons, infection
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு