×

வேறு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலை தட்டிக்கேட்ட இளம்பெண் அடித்து கொலையா?: கணவனிடம் தீவிர விசாரணை

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அடுத்த கழனிபாக்கம் அருங்குன்றத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் ஜெயலட்சுமி (30). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜெயலட்சுமிக்கும், சேகர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சேகர், வாகன விபத்தில் இறந்துவிட்டார். மானம்பதி, பெரியார் நகரை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து பிரதீப், தனது 6 வயது மகளுடன், தனியாக வசித்து வந்தார். இந்தவேளையில், ஜெயலட்சுமியை பிரதீப் சந்தித்துள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த 5 மாதத்துக்கு முன்  இரு வீட்டார் சம்மதத்துடன், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலை ஜெயலட்சுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டர். இதுபற்றி அவரது அண்ணன் ராமசாமி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள், அங்கு சென்றனர். அப்போது, அவர்களுக்கு ஜெயலட்சுமியின் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, மானாம்பதி போலீசில், ராமசாமி புகார் அளித்தார். அதில், எனது தங்கை ஜெயலட்சுமி தற்கொலை செய்ததாக எங்களுக்கு தகவல் வந்தது. ஆனால், அதில் சந்தேகம் உள்ளது. எனது தங்கையை, அவரது கணவர் பிரதீப் மற்றும் தாய் அடித்து கொலை செய்துள்ளனர் என கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா். மேலும், திருமணமாகி 5 மாதம் ஆவதால், ஆர்டிஓ விசாணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தவேளையில், ஜெயலட்சுமியின் உறவினர்கள் நேற்று, செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகம் சென்றனர். அங்கு, ஜெயலட்சுமி சாவுக்கு காரணமான பிரதீப், அவரது தாய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்டிஒ அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், பிரதீப் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து சித்திரவதை செய்ததால், அந்தபெண் தீக்குளித்து இறந்தார். அந்த பெண்ணையும் இவர்களே கொலை செய்துள்ளனர். அந்த பெண் இறந்தவுடன் பிரதீப், எனது ஜெயலட்சுமியை ஏமாற்றி 2வதாக திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணத்தின் போது, ஜெயலட்சுமியின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம், 16 சவரன் நகை இருந்தது. அதையும் ஏமாற்றி எடுத்து கொண்டனர். தற்போது திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன், பிரதீப் கள்ளக்காதல் வைத்துள்ளார். இதை தட்டிகேட்டதால், எனது தங்கையை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். 2 பெண்களின் உயிரில் விளையாடிய பிரதீப், அவரது தாய் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கூறி கதறி அழுதனர். இந்நிலையில் ஜெயலட்சுமி இறப்பதற்கு முன், தனது கைப்பட எழதிய டைரியை போலீசார் கைப்பற்றினர்.

அதில் எனது கணவர் பிரதீப் என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு முன்பே அவர் வேறு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்துள்ளார். இதை அறிந்து நான் கேட்டபோது என்னையும், 2 மகள்களையும் சரமாரியாக தினமும் அடித்து துன்புறுத்தினார். 2 மகள்களையும், என்னையும் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். எனது சாவுக்கு, என் கணவர் பிரதீப்தான் காரணம். 2 பெண் குழந்தைகளும் என்னை மண்ணித்துவிடுகள் என டைரியில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார், பிரதீப்பிடம் விசாரிக்கின்றனர்.

Tags : teenager ,death ,investigation ,love affair , Another woman, fake love, kidnapped teenager, beaten to death, husband, interrogation
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...