×

கஞ்சா விற்ற 3 பேர் கைது

ஆவடி: பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பதாக நேற்று முன்தினம் மாலை பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த பட்டாபிராம் வள்ளலார் நகர் 8வது தெரு செல்வராஜ் (எ) கான் (25), கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெரு அருண்ராஜ் (28), ஆவடி காமராஜ் நகர் 4வது தெரு தினகரன் (22) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : 3 people arrested for selling cannabis
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை