×

ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு!!!

டெல்லி:  ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் உடன் இருந்துள்ளார். டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்திற்கு சென்று சச்சின் பைலட் பேசியுள்ளார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

இதனையடுத்து சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியே முகாமிட்டிருந்தார். இதற்கிடையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டமானது நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இதன்பின்னர் அதிரடி நடவடிக்கையாக சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து சச்சின் பைலட், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டமன்றம் வரும் 14ம் தேதி கூடவுள்ள நிலையில், நம்பிக்கை வாக்கு கோரினால் காங்கிரஸ் அரசு தப்புமா? என்ற சந்தேகம் மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின் பைலட்டை சமாதானம் செய்ய மேலிட தலைவர்கள் முயற்சி எடுத்தனர். இதன் பலனாக டெல்லியில் ராகுல் காந்தியை தமது ஆதரவு எம்.எல்.எக்களுடன் சச்சின் பைலட் சந்தித்து பேசினார். அப்போது சச்சின் பைலட் வைத்த கோரிக்கைகளை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க சச்சின் பைலட் உட்பட அனைவரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராகுல் காந்தியின் சமாதானத்தை சச்சின் பைலட் ஏற்கும் பட்சத்தில் அசோக் கெலாட்டுக்கு நீடித்து வந்த ஆபத்து நீங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Congress ,Sachin Pilot ,MLA ,Rahul Gandhi ,Rajasthan , Rajasthan, Sachin Pilot,Rahul Gandhi ,
× RELATED காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு...