சென்னை: ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கம் என்று அ.வி.பே.போ.கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை அழைத்துவர குறைந்த கட்டணத்தில் பேருந்து இயக்கப்படும். மேலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.