சென்னை: ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அனைவரிடமும் அன்பு செலுத்தி பலன் கருதாது கடமையை செய்ய வேண்டும். மேலும் பகவத் கீதையின் போதனைகளான பற்றற்று இருத்தல், எளிமையாக அடக்கத்துடன் வாழ்தலையும் பின்பற்றுக என அவர் தெரிவித்துள்ளார்.