×

செக்யூரிட்டி மீது கல்வீசி தாக்குதல்

புழல்: செங்குன்றம் ஜி.என்.டி சாலை காவல் நிலையம் அருகில் தனியார் செல்போன் கடை உள்ளது. இங்கு, செங்குன்றம் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேதகிரி (73) என்பவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலையில் செங்குன்றம் நாரவாரிக்குப்பம் திருவிக தெருவை சேர்ந்த அருள் (48) என்பவர் கடை முன்பு நின்றுகொண்டிருந்தார். இதைப்பார்த்த காவலர் “ஓரம் போ” என்று சொல்லி திட்டியாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த கல்லை எடுத்து வேதகிரி தலை மீது வீசியுள்ளார். இதில், பலத்த காயம் ஏற்பட்ட வேதகிரிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Educator attack , Security, educator, attack
× RELATED கார் மீது கல்வீசி தாக்குதல்