சென்னை: கொரோனா காரணமாக அஞ்சல் அலுவலக ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் அஞ்சல் வட்டத்தில் உள்ள 1,435 ஆதார் சேவை மையங்களிலும் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இதனால் சேவை தாமத மாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்னர். புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சில அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அஞ்சலக ஆதார் சேவையை உடனுக்குடன் பெற முடியாத சூழல் எழுந்துள்ளது.