×

அதிகாரி தேர்வில் இடஒதுக்கீடு குறைப்பு வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இடஒதுக்கீடு படி யூகோ வங்கி 350 அதிகாரி பதவிகளில் 208 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கும், 142 இடங்கள் பொதுப் போட்டிப் பிரிவுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 94 இடங்களை மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு ஒதுக்கியுள்ள அந்த வங்கி நிர்வாகம், 256 இடங்களை பொதுப்போட்டிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது, அனைத்துப் பிரிவினருக்கும் சேர்த்து 59.50% இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக 27% மட்டுமே ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதிலும் கூட உயர்வகுப்பு ஏழைகளுக்கு முழுமையாக 10% இட ஒதுக்கீடு வழங்கியுள்ள நிர்வாகம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 4%, பட்டியலினத்திற்கு 10%, பழங்குடியினருக்கு 3% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இது சமூகநீதிக்கு எதிரானது.

எனவே, இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆள் தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, அனைத்துப் பிரிவினருக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை வெளியிட வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.  இட ஒதுக்கீட்டை குறைத்ததற்காக யூகோ வங்கி மீதும், அதன் மோசடிக்கு துணை போனதற்காக வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் மீது விசாரணை நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Ramdas ,bank ,PAMAC ,founder ,Pama , Action, bank , reducing reservation, officer selection, Pama founder Ramdas demand
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்