டெல்லி: கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். துபாயில் இருந்து 180 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.