சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து மலரஞ்சலி செலுத்தி வணங்கினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எழுத்தாய் நிலைத்தாய்
சொல்லாய் உள்ளாய்
பொருளாய் விளைந்தாய்.
இல்லை என்பது
பெளதிகப் பொய்
உள்ளீர் என்பதே
உணர்வுகள் சொல்லும் மெய்.
கலைஞரய்யா
கவிதை வணக்கமய்யா, எனத் தெரிவித்துள்ளார்.