நெல்லை : வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முறையாக செல்வோருக்கு இ-பாஸை வேகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு என்று பெருமுதம் கொண்டார். தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன் வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக வழங்கப்படும் என்றார்.