டெல்லி : புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், உலகத்தரத்திற்கு இணையான கல்வியை நம் மாணவர்களும் பெற வேண்டும்.உலகத்தரமான கல்வியை மாணவர்கள் பெற்றாலும் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை மறக்க கூடாது.இந்திய கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்.வேலை வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டும்.தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.நல்ல குடிமக்களை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு ஒன்றி கல்வி கற்க வேண்டும்.கல்விக் கொள்கை மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதற்கு தயாராக வேண்டும்., என்றார்.