மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடப் பணி விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தீவிரமாக கொரோனா தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக களப்பணியாளர்கள் செல்கின்றனர். உலக சுகாதார அமைப்பு, ஐசிஎம்ஆர் வழிகாகாட்டுதல்களின் படி கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.