சென்னை: கரூர் நிறுவனத்தின் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. லெபனானில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் வெடிவிபத்து போல சென்னையிலும் நடத்துவிடுமோ என்று சுங்கத்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.