×

கபினியில் இருந்து தமிழகத்துக்கு 50,600 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 50,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒருவாரமாக கன மழை பெய்து வருகிறது.  இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி, ஹாரங்கி அணைகள் நிரம்பியுள்ளன. கே.ஆர்.எஸ் மற்றும் ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை  நிலவரப்படி 108 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 29,855 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 4,715 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணை முழுமையாக நிரம்பியது. நேற்று மாலை நிலவரப்படி 2,280.65 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. நீர்வரத்து விநாடிக்கு 33,766 கனஅடியும், வெளியேற்றம் விநாடிக்கு 50,600 கனஅடியாகவும் இருந்தது. கபினி அணை நிரம்பி காவிரி மற்றும் கபிலா நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்களை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : Tamil Nadu ,Kabini , Kabini, Tamil Nadu, 50,600 cubic feet of water, opening
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...