×

வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுராந்தகம் நீதிமன்றம் வளாகம் அருகே நேற்று 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முறையான பாதுகாப்புடன் நீதிமன்றங்களை திறக்க வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கொரோனா பாதிப்பில் இருந்து குடும்பத்தை காக்கும் பொருட்டு வட்டி இல்லா கடன் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு அறிவித்த ஊக்க தொகையை ரூ.3 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும் என உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : Lawyers , Lawyers, protest
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்