×

தமிழ் வளர்ச்சி துறை திட்டம் குறித்த பதாகை திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சி துறையின் திட்டங்கள், விருதுகள் வழங்குதல், சிறந்த நூல் பரிசு போட்டி, நூல் வெளியிட நிதியுதவி, திருக்குறள் முற்றோதல் பரிசு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றை குறித்த பதாகை திறப்பு விழா நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சந்தான லட்சுமி தலைமை தாங்கினார். துறை இயக்குநர் கோ.விசயராகவன், பதாகைகளை திறந்து வைத்தார். கலெக்டர் அலுவலக வளாக முகப்பில் நாள்தோறும் திருக்குறளோடு, கலைச்சொல்லும் எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டு வருகிறது. மேலும், வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும் என்னும் அரசாணையினை செயல்படுத்திட மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் பணியாளர்களால் துண்டறிக்கை அளிக்கப்பட்டு, தமிழில் பெயர் பலகை வைத்திட வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags : Tamil Development Department Project, Banner, Opening
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...