திருத்தணி: திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ்குப்பாரெட்டி மனைவி ராணியம்மாள் (50). இவர் நேற்று காலை நுாறு நாள் வேலை திட்டத்தில், பட்டாபிராம் முதல் விநாயகபுரம் வரை செல்லும் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ராணியம்மாள் மயங்கி விழுந்தார். சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது வழியிலேயே ராணியம்மாள் இறந்தார்.