×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,68,265- ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 334 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 16,476-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 6,165 பேர் கொரோனாவில் டிஸ்சார்ஜ்; இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,05,521-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மருத்துவமனைகளில் 1,45,961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , மகாராஷ்டிரா, கொரோனா தொற்று
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி