×

குடிபோதையில் வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை: திருநின்றவூரில் சோகம்

திருநின்றவூர்: குடிபோதையில் வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால், கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருநின்றவூர், கன்னிகாபுரம், 6வது தெருவை சேர்ந்தவர் கோபி (27). பெயிண்டர். இவரது மனைவி சந்தியா (23). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. கோபிக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர், வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, அடிக்கடி மது அருந்தி விட்டு வந்துள்ளார். இதனை, மனைவி சந்தியா பல முறை கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோபி அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் சந்தியா தகராறு செய்துள்ளார். மேலும், “இனிமேல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தால், உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது. நான், எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவேன்” என சந்தியா மிரட்டியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த கோபி வீட்டின் அறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநின்றவூர் போலீசார், இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : suicide ,Thiruninravur ,home , Husband commits suicide as wife condemns drunkenness
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...