×

பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18 வயது நிரம்பிய அனைத்து மீனவர்களையும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ள வேண்டும். மீன்வளத்துறை மற்றும் நலவாரிய சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கு மானிய விலையில் தினந்தோறும் டீசல் வழங்கி வந்த நிலையில் தற்போது டீசலை வெளியில் வாங்கி கொள்ளுமாறும் பின்னர் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற நடைமுறையால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் பழைய நடைமுறைப்படியே டீசல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், மீன்வளத்துறையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என பெயர்மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.

Tags : Fishermen , In the orchard, fishermen, demonstration
× RELATED இலங்கை சிறையிலிருந்து...